திருகோணமலை - மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று(11) வியாழக்கிழமை பணிபகிஷ்ரிப்பில் ஈடுபட்டனர்.
இவ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு வழமை போன்று இயங்கியது.
வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டாலும் சிற்றூழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்தியசேவை பெறுவதற்காக வருகைதந்த பலர் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.