• Sep 08 2024

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை...! 759 சந்தேக நபர்கள் கைது...! samugammedia

Sharmi / Feb 14th 2024, 9:07 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சோதனை நடவடிக்கையின் போது 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 210 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 135 கிராம் 778 மில்லி கிராம் ஹெராயின், பனி 87 கிராம் 287 மி.கி, 25 கிலோ கஞ்சா 164 கிராம், 50849 கஞ்சா செடிகள், மாவா 179 கிராம், 1545 மாத்திரைகள், மதன மோதக 102 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், 04 பேரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 210 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேகநபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 188 பேரும், குற்றங்களுக்காக 03 சந்தேகநபர்களும் தேடப்படுகின்றனர்.


தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 759 சந்தேக நபர்கள் கைது. samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சோதனை நடவடிக்கையின் போது 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவற்றுள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 210 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 135 கிராம் 778 மில்லி கிராம் ஹெராயின், பனி 87 கிராம் 287 மி.கி, 25 கிலோ கஞ்சா 164 கிராம், 50849 கஞ்சா செடிகள், மாவா 179 கிராம், 1545 மாத்திரைகள், மதன மோதக 102 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், 04 பேரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 210 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேகநபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 188 பேரும், குற்றங்களுக்காக 03 சந்தேகநபர்களும் தேடப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement