• Jul 01 2025

கடந்த 5 மாதங்களில் 2000ஐ தாண்டிய ஊழல் குற்றச்சாட்டுகள்

Chithra / Jun 30th 2025, 8:40 am
image


இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.

அதன்படி,  2025 ஜனவரி 1 முதல் மே 31 வரை 2,138 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள புகார்கள் உட்பட, தற்போது ஆணைக்குழுவிடம்  உள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கை 2,221 ஆகும்.

இவற்றில், 224 புகார்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன, 

மேலும் 524 புகார்கள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் விசாரிக்கப்படாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்  வெளியிடப்பட்ட அறிக்கையில், 282 புகார்கள் விசாரணைக்காக பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் 2000ஐ தாண்டிய ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.அதன்படி,  2025 ஜனவரி 1 முதல் மே 31 வரை 2,138 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.2024 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள புகார்கள் உட்பட, தற்போது ஆணைக்குழுவிடம்  உள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கை 2,221 ஆகும்.இவற்றில், 224 புகார்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன, மேலும் 524 புகார்கள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் விசாரிக்கப்படாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்  வெளியிடப்பட்ட அறிக்கையில், 282 புகார்கள் விசாரணைக்காக பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement