அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நகரங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் சந்தைகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடற்கரைக்கு அருகில் ஈரான் கடற்படை கப்பல் IRIS Dena-வை டார்பிடோ தாக்குதலால் மூழ்கடித்ததாகவும், அதில் குறைந்தது 87 மாலுமிகள் உயிரிழந்ததாகவும், 32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெற்கு கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
நேட்டோவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் துருக்கியின் வான்வழியில் நுழைந்த ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை தடுத்து வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கூட்டணியை போரில் ஈடுபடுத்த வாய்ப்பில்லை என்று பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோதல் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல்களை பாதித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக அறிவித்ததையடுத்து, பல கப்பல்கள் அந்த வழித்தடத்தைத் தவிர்க்கின்றன.
சவுதி அரேபியா மூன்று ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகளை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
துபாயில் கேட்ட சத்தமான வெடிப்பு ஒலிகள் வெற்றிகரமான வான்வழி பாதுகாப்பு தடுத்தல்களால் ஏற்பட்டவை என்றும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோர்தானின் துறைமுக நகரமான அகாபாவிற்கு (Aqaba) மேலாக இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானினால் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றே இவ்வாறு ஜோர்தான் வான்பரப்பினூடாக அகாபா நகரைத் தாண்டிச் சென்றுள்ளது.
அகாபா நகருக்கு மேலாக ஏவுகணை சென்றதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
எனினும், ஜோர்தானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒரு தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக கட்டார் உள்துறை அமைச்சகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்படுபவர்களுக்குத் தேவையான மாற்றுத் தங்குமிட வசதிகளை அரசாங்கம் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் நிலவி வரும் ஆயுத மோதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பான சூழல் கனிந்தவுடன் உடனடியாக அந்தநாட்டை விட்டு வெளியேறுமாறு பக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அவசர காலப் பணியாளர்களைத் தவிர மற்ற அரச ஊழியர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வெளியேற முடியாதவர்கள் போதிய உணவு, நீர் மற்றும் மருந்துகளுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு போரின் தற்போதைய நிலை; தீவிரமடையும் மோதல் மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நகரங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் சந்தைகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடற்கரைக்கு அருகில் ஈரான் கடற்படை கப்பல் IRIS Dena-வை டார்பிடோ தாக்குதலால் மூழ்கடித்ததாகவும், அதில் குறைந்தது 87 மாலுமிகள் உயிரிழந்ததாகவும், 32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெற்கு கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.நேட்டோவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் துருக்கியின் வான்வழியில் நுழைந்த ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை தடுத்து வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கூட்டணியை போரில் ஈடுபடுத்த வாய்ப்பில்லை என்று பெண்டகன் தெரிவித்துள்ளது.ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது.குறித்த பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த மோதல் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல்களை பாதித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக அறிவித்ததையடுத்து, பல கப்பல்கள் அந்த வழித்தடத்தைத் தவிர்க்கின்றன.சவுதி அரேபியா மூன்று ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகளை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. துபாயில் கேட்ட சத்தமான வெடிப்பு ஒலிகள் வெற்றிகரமான வான்வழி பாதுகாப்பு தடுத்தல்களால் ஏற்பட்டவை என்றும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஜோர்தானின் துறைமுக நகரமான அகாபாவிற்கு (Aqaba) மேலாக இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரானினால் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றே இவ்வாறு ஜோர்தான் வான்பரப்பினூடாக அகாபா நகரைத் தாண்டிச் சென்றுள்ளது.அகாபா நகருக்கு மேலாக ஏவுகணை சென்றதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.எனினும், ஜோர்தானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒரு தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக கட்டார் உள்துறை அமைச்சகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.இவ்வாறு வெளியேற்றப்படுபவர்களுக்குத் தேவையான மாற்றுத் தங்குமிட வசதிகளை அரசாங்கம் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈராக்கில் நிலவி வரும் ஆயுத மோதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பான சூழல் கனிந்தவுடன் உடனடியாக அந்தநாட்டை விட்டு வெளியேறுமாறு பக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.அவசர காலப் பணியாளர்களைத் தவிர மற்ற அரச ஊழியர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வெளியேற முடியாதவர்கள் போதிய உணவு, நீர் மற்றும் மருந்துகளுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.