ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) அலரி மாளிகையில் சந்தித்தார்.
சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்துக்காகவும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்காகவும் ஜப்பானின் ஆதரவுக்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பாடசாலை மட்டத்திலான தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், வெளிப்படைத்தன்மையான ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் சுற்றுச்சூழலை நிலையாகப் பேணுவதில் மக்களின் ஆதரவு என்பன தொடர்பாகவும் பிரதமர் பல்வேறு விடயங்களை இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் - பிரதமருடன் ஜப்பான் துணை அமைச்சர் விசேட கலந்துரையாடல் ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) அலரி மாளிகையில் சந்தித்தார். சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.இக்கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்துக்காகவும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்காகவும் ஜப்பானின் ஆதரவுக்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பாடசாலை மட்டத்திலான தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும், வெளிப்படைத்தன்மையான ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் சுற்றுச்சூழலை நிலையாகப் பேணுவதில் மக்களின் ஆதரவு என்பன தொடர்பாகவும் பிரதமர் பல்வேறு விடயங்களை இதன்போது தெரிவித்தார்.