• Aug 18 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா? விசாரணைக்கு அழைப்பு

Chithra / Aug 17th 2025, 11:49 am
image

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.  

பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் மனுஷ சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா விசாரணைக்கு அழைப்பு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.  பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement