• Jun 13 2025

"எழுதப்படாத வசனங்கள்" குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு!

Thansita / Jun 11th 2025, 6:30 pm
image

கொழும்பு பல்கலைக்கழக ஊமடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷனாஸ் இனால் தயாரித்தளிக்கப்பட்ட “எழுதப்படாத வசனங்கள்” எனும் 15 நிமிட குறுந்திரைப்படம் சமூக ஆர்வலர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 

சிறகுநுனி கலை ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை  மாலை காத்தான்குடி செய்ஹ_ல் பலாஹ் கல்வி நிலையத்தில் சிறகுநுனி கலை ஊடக மையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆத்மா ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.


“எழுதப்படாத வசனங்கள்” குறுந்திரைப்படம் நிர்க்கதி நிலையிலுள்ள ஒரு இளம் பெண்ணின் அவலத்தை சூசகமான முறையில் சூட்சுமமாக சித்தரிக்கிறது.

“நியாயத்தையும் புரிதலையும் வேண்டி நிற்கும் தருணங்களில், சில பெண்கள் எதிர்கொள்ளும் அமைதியான போராட்டங்கள் குறித்து இக்குறும்படம் பேசுகின்றது.

வாழ்வின் கடினமான சந்தர்ப்பங்களிலும், மாற்றத்தின்போதும் குடும்பங்கள் சமூகங்கள் மற்றும் முறைமைகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வாறு அதிக அக்றையையும் ஆதரவையும் காண்பிக்க முடியும் என்ற சிந்தனைத் தூண்டலை இந்தக் குறும்படம் சூசசகமாகக் குறிப்புணர்த்துவதாக ஆவணப்படத் தயாரிப்பாளரும் விரிவுரையாளருமான பாத்திமா ஷானாஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷனாஸ், ஸ்கோப்  திட்டத்தின் ஆலோசகர் ஏ.சி.எம்.மாஹிர் உட்பட காத்தான்குடிப் பிரதேசத்தின் பல்வேறு துறைசார்ந்த சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தினாலும் கூட்டாக நிதியளிக்கப்படும் இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும்(SCOPE) நிகழ்ச்சித்திட்டத்தின் பங்காண்மையுடன்,

சிறகுநுனி கலை ஊடக மையம்  தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைத்துடன் இணைந்து இந்நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டது. (SCOPE)   நிகழ்ச்சித்திட்டம், இலங்கை அரசாங்கத்தடன் இணைந்து ஜேர்மன் நாட்டு GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


"எழுதப்படாத வசனங்கள்" குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு கொழும்பு பல்கலைக்கழக ஊமடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷனாஸ் இனால் தயாரித்தளிக்கப்பட்ட “எழுதப்படாத வசனங்கள்” எனும் 15 நிமிட குறுந்திரைப்படம் சமூக ஆர்வலர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. சிறகுநுனி கலை ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை  மாலை காத்தான்குடி செய்ஹ_ல் பலாஹ் கல்வி நிலையத்தில் சிறகுநுனி கலை ஊடக மையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆத்மா ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.“எழுதப்படாத வசனங்கள்” குறுந்திரைப்படம் நிர்க்கதி நிலையிலுள்ள ஒரு இளம் பெண்ணின் அவலத்தை சூசகமான முறையில் சூட்சுமமாக சித்தரிக்கிறது.“நியாயத்தையும் புரிதலையும் வேண்டி நிற்கும் தருணங்களில், சில பெண்கள் எதிர்கொள்ளும் அமைதியான போராட்டங்கள் குறித்து இக்குறும்படம் பேசுகின்றது. வாழ்வின் கடினமான சந்தர்ப்பங்களிலும், மாற்றத்தின்போதும் குடும்பங்கள் சமூகங்கள் மற்றும் முறைமைகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வாறு அதிக அக்றையையும் ஆதரவையும் காண்பிக்க முடியும் என்ற சிந்தனைத் தூண்டலை இந்தக் குறும்படம் சூசசகமாகக் குறிப்புணர்த்துவதாக ஆவணப்படத் தயாரிப்பாளரும் விரிவுரையாளருமான பாத்திமா ஷானாஸ் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷனாஸ், ஸ்கோப்  திட்டத்தின் ஆலோசகர் ஏ.சி.எம்.மாஹிர் உட்பட காத்தான்குடிப் பிரதேசத்தின் பல்வேறு துறைசார்ந்த சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தினாலும் கூட்டாக நிதியளிக்கப்படும் இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும்(SCOPE) நிகழ்ச்சித்திட்டத்தின் பங்காண்மையுடன், சிறகுநுனி கலை ஊடக மையம்  தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைத்துடன் இணைந்து இந்நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டது. (SCOPE)   நிகழ்ச்சித்திட்டம், இலங்கை அரசாங்கத்தடன் இணைந்து ஜேர்மன் நாட்டு GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement