அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது
மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்து ரையாடல் இடம்பெற்றது.
இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடைசெய்யப் பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் எனவும், உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும், இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும்
ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி.ஷாமினி ரவிக்குமார், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள், என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் பாதுகாப்பாக சென்றடைகின்றதா - என்பது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றதுமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்து ரையாடல் இடம்பெற்றது. இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடைசெய்யப் பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் எனவும், உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும், இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும்ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி.ஷாமினி ரவிக்குமார், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள், என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.