• Sep 25 2024

தகாத உறவால் கணவன் மனைவிக்குள் வெடித்த தகராறு; தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட 11 மாத குழந்தை

Chithra / Sep 25th 2024, 1:02 pm
image

Advertisement


கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 11 மாத குழந்தை காயமடைந்துள்ளதாக அங்குருவாத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

31 வயதுடைய கணவன் தனது அயல் வீட்டில் வசிக்கும் மற்றுமொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இது தொடர்பில் அறிந்து கொண்ட 28 வயதுடைய மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் கைத்தொலைபேசியை எடுத்து கொண்டு பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் தனது மனைவியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, தகராறு எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியைத் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதோடு மனைவியின் கையில் இருந்த 11 மாத குழந்தையின் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகாத உறவால் கணவன் மனைவிக்குள் வெடித்த தகராறு; தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட 11 மாத குழந்தை கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 11 மாத குழந்தை காயமடைந்துள்ளதாக அங்குருவாத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, 31 வயதுடைய கணவன் தனது அயல் வீட்டில் வசிக்கும் மற்றுமொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இது தொடர்பில் அறிந்து கொண்ட 28 வயதுடைய மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.பின்னர், மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் கைத்தொலைபேசியை எடுத்து கொண்டு பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் தனது மனைவியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது, தகராறு எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியைத் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதோடு மனைவியின் கையில் இருந்த 11 மாத குழந்தையின் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, காயமடைந்த குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement