கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபர், பாடசாலையில் செய்து வருகின்ற ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் இன்றைய தினம் (17)காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் ஓர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள், பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல், பாடசாலை கணக்கறிக்கைகளின் முறைகேடு, பாடசாலைக்கு மக்கள் செய்யும் நன்கொடைகளில் ஊழல், சொந்த பகமையை பயன்படுத்தி மாணவர்களை புறக்கணித்தல் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யும் நிதியில் ஊழல் செய்யாதே, நிறுத்து நிறுத்து கொள்ளையடிப்பவனை நிறுத்து, தலையிடு தலையிடு அரசாங்கமே தலையிடு உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாடசாலை சமூகத்தினர், ஒரு மாத காலத்துக்குள் இதற்க்கான முடிவு கிடைக்கவில்லை என்றால் பாடசாலையினை முடக்கி ஆர்ப்பாட்டத்தை செய்வோம்.
இவ் முறைகேடுகள் தொடர்பாக பளை கோட்டக்கல்வி பணிமனை மற்றும் வலயம் மாகணக்கல்வி திணைக்களம் போன்றவற்றிற்கு முறைப்பாட்டுக்கடிதங்களை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது சம்பந்தமாகவும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த முறைகேடு செயற்பாடுகளில் தற்போது ஆளும் கட்சியின் பச்சிளைப்பள்ளி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதனை உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அன்பளிப்பு நிதியில் ஊழல் செய்யாதே; கிளி மாசார் அ.த.க பாடசாலை அதிபருக்கு எதிராக கவனயீர்ப்பு கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி மாசார் அ.த.க பாடசாலை அதிபர், பாடசாலையில் செய்து வருகின்ற ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் இன்றைய தினம் (17)காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் ஓர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள், பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல், பாடசாலை கணக்கறிக்கைகளின் முறைகேடு, பாடசாலைக்கு மக்கள் செய்யும் நன்கொடைகளில் ஊழல், சொந்த பகமையை பயன்படுத்தி மாணவர்களை புறக்கணித்தல் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யும் நிதியில் ஊழல் செய்யாதே, நிறுத்து நிறுத்து கொள்ளையடிப்பவனை நிறுத்து, தலையிடு தலையிடு அரசாங்கமே தலையிடு உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பாடசாலை சமூகத்தினர், ஒரு மாத காலத்துக்குள் இதற்க்கான முடிவு கிடைக்கவில்லை என்றால் பாடசாலையினை முடக்கி ஆர்ப்பாட்டத்தை செய்வோம். இவ் முறைகேடுகள் தொடர்பாக பளை கோட்டக்கல்வி பணிமனை மற்றும் வலயம் மாகணக்கல்வி திணைக்களம் போன்றவற்றிற்கு முறைப்பாட்டுக்கடிதங்களை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது சம்பந்தமாகவும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை. இந்த முறைகேடு செயற்பாடுகளில் தற்போது ஆளும் கட்சியின் பச்சிளைப்பள்ளி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதனை உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.