பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ,தெரியவருகையில்,
இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவி, International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெற லண்டனில் கல்வி பயின்று வந்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கான இந்த பாடநெறிக்காக சுமார் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் அதாவது சுமார் 1.6 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் ஆண்டுக்கான 8,000 பவுண்டுகள் கட்டணம் 2025 அக்டோபர் 6ம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நவோத்யா அக்டோபர் 3ஆம் திகதியே பணம் அனுப்பியிருந்தாலும், வங்கி பரிமாற்ற தாமதம் காரணமாக அது அக்டோபர் 7ஆம் திகதியே பல்கலைக்கழக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை காரணமாகக் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், அவரை பாடநெறியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு தகவலும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தன் தரப்பில் தவறு இல்லையெனக் கூறும் நவோத்யா, “நான் காலக்கெடுவுக்கு முன்பே பணம் அனுப்பினேன். வங்கி தாமதம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. . வகுப்புகளுக்கு ஒழுங்காகச் சென்று, சிறந்த புள்ளிகளைப் பெற்ற என்னைத் தண்டிப்பது மிகவும் அநீதியானது.
எனது தந்தையின் வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டு, பட்டமும் இல்லாமல் இலங்கை திரும்பினால் எனது வாழ்க்கை பாழாகிவிடும்” என கவலையுடன் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், பல்கலைக்கழக தரப்பில், மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், வீசா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த மாணவி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். அது நிராகரிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ஒரு சிறிய நிர்வாக தாமதத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு கல்வி கனவு சிதைந்தது. பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பரிதாப நிலை பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.மேலும் ,தெரியவருகையில், இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவி, International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெற லண்டனில் கல்வி பயின்று வந்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கான இந்த பாடநெறிக்காக சுமார் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் அதாவது சுமார் 1.6 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான 8,000 பவுண்டுகள் கட்டணம் 2025 அக்டோபர் 6ம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நவோத்யா அக்டோபர் 3ஆம் திகதியே பணம் அனுப்பியிருந்தாலும், வங்கி பரிமாற்ற தாமதம் காரணமாக அது அக்டோபர் 7ஆம் திகதியே பல்கலைக்கழக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகக் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், அவரை பாடநெறியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு தகவலும் வழங்கப்பட்டுள்ளது.எனினும், தன் தரப்பில் தவறு இல்லையெனக் கூறும் நவோத்யா, “நான் காலக்கெடுவுக்கு முன்பே பணம் அனுப்பினேன். வங்கி தாமதம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. . வகுப்புகளுக்கு ஒழுங்காகச் சென்று, சிறந்த புள்ளிகளைப் பெற்ற என்னைத் தண்டிப்பது மிகவும் அநீதியானது. எனது தந்தையின் வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டு, பட்டமும் இல்லாமல் இலங்கை திரும்பினால் எனது வாழ்க்கை பாழாகிவிடும்” என கவலையுடன் தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில், பல்கலைக்கழக தரப்பில், மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், வீசா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது குறித்த மாணவி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். அது நிராகரிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், ஒரு சிறிய நிர்வாக தாமதத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.