பருத்தித்துறை பொலீஸாரால் வர்த்தகர்களுக்கு போதை விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியங்த அமரசிங்க தலமையில் இடம் பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பருத்தித்துறை உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் தயாள் இலங்ககோனும் கலந்து கொண்டு போதை ஒழிப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
இதில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கலாவினோதன் மற்றும் பொலீஸார், பருத்தித்துறை, மந்திகை பகுதிக்கு உட்பட்ட வர்த்யகர்களும் கலந்து கொண்டனர்.