புத்தளம் - கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அmதன்போது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதை மாத்திரைகள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் கடற்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் போதைமாத்திரைகள் மீட்பு புத்தளம் - கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.அmதன்போது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போதை மாத்திரைகள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் கடற்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.