வைத்தியரை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கண்டி தேசிய வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான வைத்தியர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த இரவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர், முச்சக்கர வண்டியில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பேராதனை பிரதான வீதிக்கு செல்லும் குறுகிய வீதி ஊடாக வந்துள்ளார்.
வைத்தியசாலை வளாகத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த வீதியை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் முடிவு செய்ததால்,
அவரை வைத்தியசாலை வளாகத்திற்குள் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதன்போது வைத்தியரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தமையினால், பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வார்த்தைப் பிரயோகம் காரணமாக அவரது பயணம் தடைபட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி தான் வைத்தியசாலை ஊழியர் எனவும், வைத்தியசாலை ஊழியர் என்றால் அடையாள அட்டையை காட்டி வைத்தியசாலை வளாகத்திற்குள் செல்லுமாறு வைத்தியர் கூறியுள்ளார்.
அப்போது அந்த நபர் வைத்தியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
சந்தேக நபரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்த நிலையில், அவரது சகோதரர் ஒருவரும் அவ்விடத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது கண்டி, ஹந்தான கெமுனு மாவத்தையில் வசிக்கும் இருவரும் குடிபோதையில் இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் வைத்தியரை சரமாரியாக தாக்கிய சகோதரர்கள் - தேசிய வைத்தியசாலையில் சம்பவம் வைத்தியரை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கண்டி தேசிய வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தாக்குதலுக்குள்ளான வைத்தியர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த இரவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர், முச்சக்கர வண்டியில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பேராதனை பிரதான வீதிக்கு செல்லும் குறுகிய வீதி ஊடாக வந்துள்ளார்.வைத்தியசாலை வளாகத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த வீதியை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் முடிவு செய்ததால், அவரை வைத்தியசாலை வளாகத்திற்குள் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.இதன்போது வைத்தியரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தமையினால், பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வார்த்தைப் பிரயோகம் காரணமாக அவரது பயணம் தடைபட்டுள்ளது.முச்சக்கரவண்டி சாரதி தான் வைத்தியசாலை ஊழியர் எனவும், வைத்தியசாலை ஊழியர் என்றால் அடையாள அட்டையை காட்டி வைத்தியசாலை வளாகத்திற்குள் செல்லுமாறு வைத்தியர் கூறியுள்ளார். அப்போது அந்த நபர் வைத்தியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.சந்தேக நபரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்த நிலையில், அவரது சகோதரர் ஒருவரும் அவ்விடத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரையும் பொலிஸார் கைது செய்தனர்.சம்பவத்தின் போது கண்டி, ஹந்தான கெமுனு மாவத்தையில் வசிக்கும் இருவரும் குடிபோதையில் இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.