• May 01 2026

மின்சார கட்டணங்களின் அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாதிப்பு...! ராஜேந்திரன் சுட்டிக்காட்டு...!samugammedia

Ziya / Dec 8th 2023, 3:22 pm
image

மேல் மாகாணம் அதிக மக்கள் வாழ்கின்ற பகுதியாக காணப்படுகின்றது. இன்று முழு இலங்கையிலும் மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் மக்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் என  ஜனநாயக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் மேல் மாகாணசபை உறுப்பினருமான ராஜேந்திரன் தெரிவித்துள்ளார் .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,   

மின்சார கட்டண அதிகரிப்பானது கொழும்பில் வாழுகின்ற ஏழை மக்களுக்கு இவை மிகுந்த பாதிப்பை கொடுக்கின்றது. மின்சார உற்பத்தியினை செய்வதற்கான சூழல் இருந்தும் மக்களுக்கான நிவாரணம் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை செய்யாதுள்ளது இதனை அரசாங்கம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணங்களின் அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாதிப்பு. ராஜேந்திரன் சுட்டிக்காட்டு.samugammedia மேல் மாகாணம் அதிக மக்கள் வாழ்கின்ற பகுதியாக காணப்படுகின்றது. இன்று முழு இலங்கையிலும் மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் மக்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் என  ஜனநாயக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் மேல் மாகாணசபை உறுப்பினருமான ராஜேந்திரன் தெரிவித்துள்ளார் .கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,   மின்சார கட்டண அதிகரிப்பானது கொழும்பில் வாழுகின்ற ஏழை மக்களுக்கு இவை மிகுந்த பாதிப்பை கொடுக்கின்றது. மின்சார உற்பத்தியினை செய்வதற்கான சூழல் இருந்தும் மக்களுக்கான நிவாரணம் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை செய்யாதுள்ளது இதனை அரசாங்கம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement