இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.