• Oct 04 2024

கடந்த காலம் இடம் பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணைய வேண்டும் - பாட்டாலி சம்பிக்க ரணவக்க..!!

Tamil nila / Jan 20th 2024, 8:52 pm
image

Advertisement

இலங்கையில் கடந்தகாலம் இடம்பெற்ற கசப்பான சம்பங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் கடந்தகாலம் இடம்பெற்ற கசப்பான சம்பங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய குடியரசு முன்னணியின்  கிழக்கு மாகாண கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.

இதன் போது சிறப்பு பேச்சுகள் நடைபெற்றதுடன் ஐக்கிய குடியரசு முன்னணியின் செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

இந்த நாட்டினை தொடர்ந்து ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டினை அனைத்து வழிகளிலும் நாசமாக்கியுள்ளனர். இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து நெருக்கடிகளிலுமிருந்து மீட்டெகடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இதற்காக நாங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான விடயங்களை மறந்து ஒரு தாயின் பிள்ளைகளான ஒன்றிணைய முன்வரவேண்டும். இந்த நாட்டில் கடந்த ஆட்சியாளர்களின் பிரிக்கும் தந்திரம் ஊடாக இனரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிபட்டுள்ள அனைவரையும் நான் எனது கட்சி ஊடாக ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்.

கடந்த காலத்தில் முறையான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இந்த நாடு குப்பைத்தொட்டியாக மாறியது. நான் சுற்றாடல் அமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தேன். 

இந்த நாட்டில் வெள்ளம் ஏற்படும்போது கொழும்பு பகுதிகள் பெரிதாக பாதிப்பக்கப் படுவதில்லை. அங்கு முன்னெடுக்கப்பட்ட சிறந்தமுறையான வடிகான்களே அதற்கு காரணமாகும். ஆனால் அந்த திட்டங்கள் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதனால் வெள்ளத்தில் மூழ்கின்றது எந அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலம் இடம் பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணைய வேண்டும் - பாட்டாலி சம்பிக்க ரணவக்க. இலங்கையில் கடந்தகாலம் இடம்பெற்ற கசப்பான சம்பங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.இலங்கையில் கடந்தகாலம் இடம்பெற்ற கசப்பான சம்பங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணியின்  கிழக்கு மாகாண கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டார்.இதன் போது சிறப்பு பேச்சுகள் நடைபெற்றதுடன் ஐக்கிய குடியரசு முன்னணியின் செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,இந்த நாட்டினை தொடர்ந்து ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டினை அனைத்து வழிகளிலும் நாசமாக்கியுள்ளனர். இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து நெருக்கடிகளிலுமிருந்து மீட்டெகடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.இதற்காக நாங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான விடயங்களை மறந்து ஒரு தாயின் பிள்ளைகளான ஒன்றிணைய முன்வரவேண்டும். இந்த நாட்டில் கடந்த ஆட்சியாளர்களின் பிரிக்கும் தந்திரம் ஊடாக இனரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிபட்டுள்ள அனைவரையும் நான் எனது கட்சி ஊடாக ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்.கடந்த காலத்தில் முறையான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இந்த நாடு குப்பைத்தொட்டியாக மாறியது. நான் சுற்றாடல் அமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தேன். இந்த நாட்டில் வெள்ளம் ஏற்படும்போது கொழும்பு பகுதிகள் பெரிதாக பாதிப்பக்கப் படுவதில்லை. அங்கு முன்னெடுக்கப்பட்ட சிறந்தமுறையான வடிகான்களே அதற்கு காரணமாகும். ஆனால் அந்த திட்டங்கள் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதனால் வெள்ளத்தில் மூழ்கின்றது எந அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement