இந்தியாவில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர்.
சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவ்வுடல் காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது
சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் அவர்களின் மகன் தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்
அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு குழு தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ அழைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்
விடயத்தை அறிந்த அண்ணன் நேபாள நாட்டிற்கு சென்று தம்பியை பத்திரமாக அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்துள்ளார். பொலிஸார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பொலிஸார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
தகனம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் பரபரப்பு- நடந்தது என்ன இந்தியாவில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அவ்வுடல் காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களின் மகன் தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு குழு தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ அழைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார் விடயத்தை அறிந்த அண்ணன் நேபாள நாட்டிற்கு சென்று தம்பியை பத்திரமாக அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்துள்ளார். பொலிஸார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பொலிஸார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது