• Sep 17 2024

திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு- குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை..!

Sharmi / Aug 17th 2024, 10:19 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடிபோது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தம்மிடம் உறுதியளித்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது. இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதோடு, ஆசிரியர் வெற்றிடங்கள் 500ம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது.

இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன. வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம் பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. 

கல்வி சுகாதாரம் சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம். 1976 ன் பின்கட்டுகுளப் பகுதிக்கு முதல் பாராளுமன்ற பிரதிநிதி நானே புல்மோடுடை திரியாய் குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெற்போலியன் கூறியது போன்று "பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது" எனக் கூறினார். 

குறித்த சந்திப்பில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு- குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடிபோது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தம்மிடம் உறுதியளித்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.திருகோணமலை புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது. இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதோடு, ஆசிரியர் வெற்றிடங்கள் 500ம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது.இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன. வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம் பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. கல்வி சுகாதாரம் சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம். 1976 ன் பின்கட்டுகுளப் பகுதிக்கு முதல் பாராளுமன்ற பிரதிநிதி நானே புல்மோடுடை திரியாய் குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெற்போலியன் கூறியது போன்று "பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது" எனக் கூறினார். குறித்த சந்திப்பில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement