புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது ஒரு அரசியல் திருட்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட முன் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் இன்றளவிலும் அந்த உடன்படிக்கையின் பிரதிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 5 இலட்சத்து 835 வாக்குகளைப் பெற்றது.
இதற்கமைய, புதிய ஜனநாயக முன்னணி 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.
அதில் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக ஏற்கனவே ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்
இந்நிலையில், மீதமுள்ள ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு பைஸர் முஸ்தபா தெரிவு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது ஒரு அரசியல் திருட்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.தேர்தலில் போட்டியிட முன் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் இன்றளவிலும் அந்த உடன்படிக்கையின் பிரதிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 5 இலட்சத்து 835 வாக்குகளைப் பெற்றது.இதற்கமைய, புதிய ஜனநாயக முன்னணி 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.அதில் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக ஏற்கனவே ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்இந்நிலையில், மீதமுள்ள ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.