• Sep 21 2024

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - குடும்பஸ்தர் பலி!

Tamil nila / Jul 28th 2024, 7:22 am
image

Advertisement

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம், கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தைப் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது ஓட்டோவின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கொடகவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தனியார் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - குடும்பஸ்தர் பலி மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரத்தினபுரி மாவட்டம், கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தைப் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின்போது ஓட்டோவின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கொடகவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.தனியார் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement