• May 02 2024

தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி..! தமிழர் பகுதியில் துயரம்

Chithra / Dec 20th 2023, 8:19 am
image

Advertisement

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்காக செல்லும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 34 வயதுடைய கணேசன் ரமேஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட வேளையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து குறித்த நபரை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி. தமிழர் பகுதியில் துயரம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்காக செல்லும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 34 வயதுடைய கணேசன் ரமேஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட வேளையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இருப்பினும் விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து குறித்த நபரை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement