முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம், இன்றையதினம் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள், தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு ஐவர் முகாமிற்கு சென்றுள்ளனர்.
அங்கு இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இறந்தவரின் உடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்ய இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம்; பொலிஸார், விஷேட அதிரடி படையினர் குவிப்பு முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம், இன்றையதினம் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள், தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு ஐவர் முகாமிற்கு சென்றுள்ளனர். அங்கு இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இறந்தவரின் உடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்ய இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.