• Jun 04 2026

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

shanu / Jun 4th 2026, 6:39 pm
image

ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான பணிப்பாளருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 

இல்லப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 அதன்படி முதியோர் இல்லப் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 


இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - பணிப்பாளருக்கு விளக்கமறியல் ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான பணிப்பாளருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து இல்லப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதன்படி முதியோர் இல்லப் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement