திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற, மீனவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டித்து இன்று(4) கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா மீனவர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஏழை மீனவர்களை தாக்காதே! எமது கடலில் மீன் பிடிக்க எமக்கு உரிமை இல்லையா?, மீனவர் சமூகத்தை நசிக்காதே! நாளாந்தம் வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்வாதாரத்தை தேடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடா?, மீனவர்கள் வயிற்றில் கை வைக்காதே! போன்ற கோஷங்களை எழுப்பி, இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டினர்.
இதன்போது, திருகோணமலை மாவட்ட மீனவர்கள், தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையிலிருந்து அரசு மீனவர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்தோடு, துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்தனர்
குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று(3) கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின், அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீனவர் மீது துப்பாக்கிச் சூடு: கிண்ணியாவில் கண்டன ஆர்ப்பாட்டம். திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற, மீனவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டித்து இன்று(4) கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கிண்ணியா மீனவர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.ஏழை மீனவர்களை தாக்காதே எமது கடலில் மீன் பிடிக்க எமக்கு உரிமை இல்லையா, மீனவர் சமூகத்தை நசிக்காதே நாளாந்தம் வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்வாதாரத்தை தேடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடா, மீனவர்கள் வயிற்றில் கை வைக்காதே போன்ற கோஷங்களை எழுப்பி, இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டினர். இதன்போது, திருகோணமலை மாவட்ட மீனவர்கள், தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையிலிருந்து அரசு மீனவர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.அத்தோடு, துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்தனர் குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று(3) கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின், அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.