மட்டக்களப்பு - வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த நபரின் சடலம் நேற்று இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று பேருடன், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் அவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடையவர் ஆவார்.
மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மீனவரை கொலை செய்த மீன் - வாழைச்சேனையில் துயரம் மட்டக்களப்பு - வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.மரணமடைந்த நபரின் சடலம் நேற்று இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மூன்று பேருடன், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் அவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடையவர் ஆவார். மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.