• Apr 15 2026

அதிரடி படையின் முகாம் பகுதியில் காட்டுத் தீ பரவல்!

shanu / Apr 2nd 2026, 4:31 pm
image

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரக்காடு கிராம அதிரடி படையின் முகாம் பகுதியில் காட்டு தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 


இச் சம்பவம் நேற்று காலை 9 மணிக்கு இடம் பெற்று உள்ளது.


இந்த காட்டு தீ ரக்காடு கிராமத்தில் உள்ள பைன்ஸ் 44 ஏக்கர் பரப்பளவில் பயிரிட பட்ட லக்சபான வாழமலை ஒட்டிய பகுதியில் இடம் பெற்று உள்ளது.


பைன்ஸ் வனப் பகுதியில் தீ பரவல் காரணமாக நல்லதண்ணி பொலிசார் ரக்காடு அதிரடி படையினர் மற்றும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து 6 மணித்தியாலம் போராடி தீயை அணைத்தனர்.


தீ பரவல் காரணமாக சந்தேகத்தின் பேரில் லக்சபான வாழமலை பிரிவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிரடி படையின் முகாம் பகுதியில் காட்டுத் தீ பரவல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரக்காடு கிராம அதிரடி படையின் முகாம் பகுதியில் காட்டு தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை 9 மணிக்கு இடம் பெற்று உள்ளது.இந்த காட்டு தீ ரக்காடு கிராமத்தில் உள்ள பைன்ஸ் 44 ஏக்கர் பரப்பளவில் பயிரிட பட்ட லக்சபான வாழமலை ஒட்டிய பகுதியில் இடம் பெற்று உள்ளது.பைன்ஸ் வனப் பகுதியில் தீ பரவல் காரணமாக நல்லதண்ணி பொலிசார் ரக்காடு அதிரடி படையினர் மற்றும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து 6 மணித்தியாலம் போராடி தீயை அணைத்தனர்.தீ பரவல் காரணமாக சந்தேகத்தின் பேரில் லக்சபான வாழமலை பிரிவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement