• Sep 14 2024

'கிளப் வசந்த' கொலை – முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது!

Chithra / Aug 29th 2024, 10:40 am
image

Advertisement

 

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பாணந்துறை பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

'கிளப் வசந்த' கொலை – முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது  கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் நேற்று கைது செய்யப்பட்டனர்.பாணந்துறை பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காலி நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement