• Jul 27 2024

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணை- இலங்கை வரும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

Chithra / May 29th 2024, 1:12 pm
image

Advertisement


குஜராத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது.

எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணை- இலங்கை வரும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குஜராத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது.எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement