• Sep 18 2024

CT ஸ்கேன் கேட்ட மன்னார் மக்கள் கைவிரித்தார் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன!

Tamil nila / Jul 17th 2024, 10:11 pm
image

Advertisement

நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தில் CT ஸ்கான் வசதிகள் இல்லாமையால் நோயாளர்கள்,பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். 

குறிப்பாக ஸ்கான் மேற்கொள்வதற்காக நாள் ஒன்று மூன்று தொடக்கம் ஐந்து வரையான நோயாளர்கள் வவுனியா அல்லது யாழ்பாணம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளடங்களான குழுவினரிடம் வைத்தியசாலை பணிப்பாளர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வைத்திய சாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கூட்டாக CT ஸ்கான் வசதிகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டதாகவும் வருகின்ற வருட பாத்தீட்டில்  குறித்த CT ஸ்கானை பெற்று தருவதாகவும் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தொடர்சியாக ஒவ்வொரு முறையும் CT ஸ்கான் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்கத்திடமும்,அமைச்சர்களிடமும் அதே நேரம் பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்சியாக மன்னார் மக்களின் கோரிக்கை கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CT ஸ்கேன் கேட்ட மன்னார் மக்கள் கைவிரித்தார் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நீண்டகாலமாக மன்னார் மாவட்டத்தில் CT ஸ்கான் வசதிகள் இல்லாமையால் நோயாளர்கள்,பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். குறிப்பாக ஸ்கான் மேற்கொள்வதற்காக நாள் ஒன்று மூன்று தொடக்கம் ஐந்து வரையான நோயாளர்கள் வவுனியா அல்லது யாழ்பாணம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டு வந்தது.இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளடங்களான குழுவினரிடம் வைத்தியசாலை பணிப்பாளர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வைத்திய சாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கூட்டாக CT ஸ்கான் வசதிகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இருப்பினும் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டதாகவும் வருகின்ற வருட பாத்தீட்டில்  குறித்த CT ஸ்கானை பெற்று தருவதாகவும் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.தொடர்சியாக ஒவ்வொரு முறையும் CT ஸ்கான் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்கத்திடமும்,அமைச்சர்களிடமும் அதே நேரம் பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்சியாக மன்னார் மக்களின் கோரிக்கை கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement