• Jul 03 2024

பாட்டுக் கேட்ட இளைஞனை பரலோகம் அனுப்பிய கிம்

Tharun / Jul 1st 2024, 5:35 pm
image

Advertisement

மர்மதேசமான வடகொரியாவில்  பாட்டுக் கேட்ட, திரைப்படம் பார்த்த  இளைஞனை பொது  வெளியில் தூக்கிட்டு கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

2022 ஆம் ஆண்டு  நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவம்  இப்போதுதான்  உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.

 வடகொரியாவில் 22 வயது இளைஞர் பொதுவெளியில் தூக்கிட்டு கொல்லப்பட்டுள்ளாராம். இதற்கு பின்னணியில் அவர் கே ‍ பொப் பாடல்கள் கேட்டதும், 3 திரைப்படங்களை பார்த்ததும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கே பொப் (K Pop) என்பது பிரபலமான கொரிய இசை பாடல்களாகும். இது பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. இது தென்கொரியாவில் உருவானது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில் இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

ஹொலிவுட் படம் பார்த்தால்.. சின்ன குழந்தைக்கும் 5 ஆண்டு சிறை! பெற்றோருக்கும் ஜெயில்! அடாவடி உத்தரவு இது தொடர்பாக வடகொரியா மனித உரிமைகள் என்ற தலைப்பில் ‛தி கார்டியனில்' செய்தி வெளியடப்பட்டுள்ளது.

 அதில், வடகொரியாவின் தென் ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் 70 தென்கொரிய பாடல்கள் மற்றும் மூன்று திரைப்படங்களை பார்த்துள்ளார். மேலும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். இதுதொடர்பாக குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 பொதுவெளியில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாசாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டம் என்பது மேற்குலக கலாசாரத்தில் இருந்து வடகொரியா மக்களை பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்டது. தென்கொரியாவின் திரைப்படம் மற்றும் பாடல்களை பார்த்த பலரும் நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும். இப்படியான அடிமையான வாழ்க்கை வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என்று தெரிவித்துள்ளனர்'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் II ஜாங் முதலில் ஜனாதிபதியாவார்.  அதன்பிறகு தந்தை கிம் ஜாங் இல் , இப்போது இதையடுத்து கிம் ஜாங் உன் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார்.   வடகொரியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. மற்றபடி பிற நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது இல்லை.

 குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதோடு அமெரிக்காவுக்கு அடிக்கடி மிரட்டல் விடும் செயலையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியாவில் இணையதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களுக்கும் குறிப்பிட்ட சிகை அலங்காரம் மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் லிப்ஸ்ட்டிக் பயன்படுத்த கூடாது என்பது உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் வடகொரியாவில் அமுலில் உள்ளதாககூறப்படுகிறது.

 பொழுதுபோக்கு வசதி கூட அந்த மக்களுக்கு கிடையாது. அரசு சார்பில் வழங்கப்படும் 2 சேனல்களை மட்டுமே பார்க்கலாம். அதிலும் எப்போதும் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த செய்திகள் மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது. 

பாட்டுக் கேட்ட இளைஞனை பரலோகம் அனுப்பிய கிம் மர்மதேசமான வடகொரியாவில்  பாட்டுக் கேட்ட, திரைப்படம் பார்த்த  இளைஞனை பொது  வெளியில் தூக்கிட்டு கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.2022 ஆம் ஆண்டு  நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவம்  இப்போதுதான்  உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் 22 வயது இளைஞர் பொதுவெளியில் தூக்கிட்டு கொல்லப்பட்டுள்ளாராம். இதற்கு பின்னணியில் அவர் கே ‍ பொப் பாடல்கள் கேட்டதும், 3 திரைப்படங்களை பார்த்ததும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கே பொப் (K Pop) என்பது பிரபலமான கொரிய இசை பாடல்களாகும். இது பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. இது தென்கொரியாவில் உருவானது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில் இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.ஹொலிவுட் படம் பார்த்தால். சின்ன குழந்தைக்கும் 5 ஆண்டு சிறை பெற்றோருக்கும் ஜெயில் அடாவடி உத்தரவு இது தொடர்பாக வடகொரியா மனித உரிமைகள் என்ற தலைப்பில் ‛தி கார்டியனில்' செய்தி வெளியடப்பட்டுள்ளது. அதில், வடகொரியாவின் தென் ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் 70 தென்கொரிய பாடல்கள் மற்றும் மூன்று திரைப்படங்களை பார்த்துள்ளார். மேலும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். இதுதொடர்பாக குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 பொதுவெளியில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாசாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டம் என்பது மேற்குலக கலாசாரத்தில் இருந்து வடகொரியா மக்களை பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்டது. தென்கொரியாவின் திரைப்படம் மற்றும் பாடல்களை பார்த்த பலரும் நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும். இப்படியான அடிமையான வாழ்க்கை வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என்று தெரிவித்துள்ளனர்'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் II ஜாங் முதலில் ஜனாதிபதியாவார்.  அதன்பிறகு தந்தை கிம் ஜாங் இல் , இப்போது இதையடுத்து கிம் ஜாங் உன் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார்.   வடகொரியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. மற்றபடி பிற நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது இல்லை. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதோடு அமெரிக்காவுக்கு அடிக்கடி மிரட்டல் விடும் செயலையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியாவில் இணையதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களுக்கும் குறிப்பிட்ட சிகை அலங்காரம் மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் லிப்ஸ்ட்டிக் பயன்படுத்த கூடாது என்பது உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் வடகொரியாவில் அமுலில் உள்ளதாககூறப்படுகிறது. பொழுதுபோக்கு வசதி கூட அந்த மக்களுக்கு கிடையாது. அரசு சார்பில் வழங்கப்படும் 2 சேனல்களை மட்டுமே பார்க்கலாம். அதிலும் எப்போதும் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த செய்திகள் மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement