முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் மிகக் குறைந்த மழையின் போது கூட, அந்தக் கற்கள் மீண்டும் சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதைக் கருத்திற்கொண்டு, முதலாம் கட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் பிரிவின் பிரதம பொறியியலாளர் சாமர யாபா ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,
வானிலை அவதானிப்பு நிலையத்தின் தகவல்களுக்கு அமைய ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்துத் திணைக்களம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வசமுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கிரிந்தி ஓயா, வலவை, தெதுரு ஓயா, மல்வத்து ஓயா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறுகையில், தற்போது சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் அனர்த்த மேலாண்மைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மண்ரிவு, வெள்ள அபாயம் - மக்கள் அவதானமாக இருக்குமாறு அவசர எச்சரிக்கை முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் மிகக் குறைந்த மழையின் போது கூட, அந்தக் கற்கள் மீண்டும் சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார். முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதைக் கருத்திற்கொண்டு, முதலாம் கட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் பிரிவின் பிரதம பொறியியலாளர் சாமர யாபா ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில், வானிலை அவதானிப்பு நிலையத்தின் தகவல்களுக்கு அமைய ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்துத் திணைக்களம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வசமுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். தற்போதைய மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கிரிந்தி ஓயா, வலவை, தெதுரு ஓயா, மல்வத்து ஓயா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறுகையில், தற்போது சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் அனர்த்த மேலாண்மைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.