• Oct 17 2024

இதுவரை காலமும் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த கட்சிகள்தான் பாராளுமன்றத்தை அலங்கரித்தன - செந்தில் வேல்

Tharmini / Oct 17th 2024, 2:26 pm
image

Advertisement

மக்கள் போராட்ட முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமது தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவினை ஏற்படுத்தினர். சீ.கா செந்தில் வேல் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி போடுகின்றோம். நாங்கள் ஒரு மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக இந்த தேர்தலில் போட்டிபோடுகின்றோம். முன்னிலை சோசலிச கட்சி, சோசலிச மக்கள் மன்றம், புதிய மார்க்சிச ஜனநாயக லெனின் கட்சி, மற்றும் அரை களைய எனக் கூறப்படும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து நாங்கள் இந்த கூட்டணியாக தேர்தலில் போட்டி போடுகின்றோம்.

எங்களுடைய சின்னம் குடைச்சின்னம். ஜனாதிபதி தேர்தலிலும் அதே சின்னத்தில் மக்கள் போராட்ட முன்னணி போட்டிபோட்டு இருந்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஏன் நாங்கள் பங்கு பெற்றுக் கொண்டோம் என்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும். தெற்கிலே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி எல்லோரும் பேசிக் கொள்கின்றார்கள்.

பாரம்பரியமாக இருந்து வந்த பாராளுமன்ற அரசியலிலே, 76 வருடங்களாக பாராளுமன்ற அரசியலிலே தலைமை தாங்கி ஆட்சியின் பக்கமும் எதிர்க்கட்சி பக்கமும், இருந்து வந்த பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அதற்குப் பின்னர் வந்த பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சி இவர்கள்தான் கடந்த காலங்களில் ஆட்சி செய்து வந்தார்கள்.   

இவர்கள் யார் என்றால், மிகவும் சொத்து சுகம்படைத்த மேட்டுக்குடி உயர் வர்க்கத்தைச் சேர்ந்த கட்சிகள்தான் பாராளுமன்றத்தை அலங்கரித்து இருந்தன.

அதன் மூலம்தான் அவர்களுடைய 76 வருட பாராளுமன்ற ஆட்சியும், 45 வருட கால ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையும் எங்கள் நாட்டை முற்றும் முழுதாக ஒரு வங்குரோத் நிலைக்கு விட்டு சென்றுள்ளது


இதுவரை காலமும் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த கட்சிகள்தான் பாராளுமன்றத்தை அலங்கரித்தன - செந்தில் வேல் மக்கள் போராட்ட முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமது தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவினை ஏற்படுத்தினர். சீ.கா செந்தில் வேல் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி போடுகின்றோம். நாங்கள் ஒரு மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக இந்த தேர்தலில் போட்டிபோடுகின்றோம். முன்னிலை சோசலிச கட்சி, சோசலிச மக்கள் மன்றம், புதிய மார்க்சிச ஜனநாயக லெனின் கட்சி, மற்றும் அரை களைய எனக் கூறப்படும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து நாங்கள் இந்த கூட்டணியாக தேர்தலில் போட்டி போடுகின்றோம்.எங்களுடைய சின்னம் குடைச்சின்னம். ஜனாதிபதி தேர்தலிலும் அதே சின்னத்தில் மக்கள் போராட்ட முன்னணி போட்டிபோட்டு இருந்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஏன் நாங்கள் பங்கு பெற்றுக் கொண்டோம் என்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும். தெற்கிலே ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி எல்லோரும் பேசிக் கொள்கின்றார்கள்.பாரம்பரியமாக இருந்து வந்த பாராளுமன்ற அரசியலிலே, 76 வருடங்களாக பாராளுமன்ற அரசியலிலே தலைமை தாங்கி ஆட்சியின் பக்கமும் எதிர்க்கட்சி பக்கமும், இருந்து வந்த பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அதற்குப் பின்னர் வந்த பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சி இவர்கள்தான் கடந்த காலங்களில் ஆட்சி செய்து வந்தார்கள்.   இவர்கள் யார் என்றால், மிகவும் சொத்து சுகம்படைத்த மேட்டுக்குடி உயர் வர்க்கத்தைச் சேர்ந்த கட்சிகள்தான் பாராளுமன்றத்தை அலங்கரித்து இருந்தன. அதன் மூலம்தான் அவர்களுடைய 76 வருட பாராளுமன்ற ஆட்சியும், 45 வருட கால ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையும் எங்கள் நாட்டை முற்றும் முழுதாக ஒரு வங்குரோத் நிலைக்கு விட்டு சென்றுள்ளது

Advertisement

Advertisement

Advertisement