• Jul 04 2025

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

shanuja / Jul 4th 2025, 4:37 pm
image

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில்  முன்னேற்றத்தைக் கருதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   


 Dewmas நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில்   நாளை  (05) தொழில்வாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது.   


இதனை Dewmas நிறுவனத்தின் பணிப்பாளர் விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 


தொழில்வாய்ப்பு முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளனர். 


பல தொழில் சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.


அத்துடன் குறித்த  முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர், யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன்  1000 இற்கும் மேற்பட்டோர் குறித்த முகாமில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.- என்றார்.

யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில்  முன்னேற்றத்தைக் கருதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    Dewmas நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில்   நாளை  (05) தொழில்வாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது.   இதனை Dewmas நிறுவனத்தின் பணிப்பாளர் விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தொழில்வாய்ப்பு முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளனர். பல தொழில் சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.அத்துடன் குறித்த  முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர், யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன்  1000 இற்கும் மேற்பட்டோர் குறித்த முகாமில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement