வடமாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதற்குரிய வேலைத்திட்டங்கள் சரியான முறையில் இடம்பெற்றதா, வீதிகள் ஒழுங்கான முறையில் திருத்தம் செய்யப்பட்டதா? அவ்வாறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை “ஒவ்வொரு வீதியாக சென்று பரிசோதிப்பேன்” என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் காலை 09.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறு கேள்விகளை அதிகாரிகளிடத்தே எழுப்பியுள்ளார்.
கூட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாவட்டச் செயலாளர் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தான் மத்திய அரசாங்கத்தால் மாகாண அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்ச் 21 ஆம் திகதிக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் நிதி ஒதுக்கீட்டுக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றது.
அதிலும் சில அபிவிருத்திக்கு நிதி வந்துள்ளது. சில அபிவிருத்திக்கு நிதி வரவில்லை. சாதாரண நிதிப் பிரமாண நடைமுறைகளுக்கு அமைவாக ஒரு நிதி கூறுவிலைகளைப் போடுமாக இருந்தால் 14 நாட்கள் திட்டத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இருப்பினும் காலதாமதத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் தான் இந்த நிதி எமக்குக் கிடைத்தது. என்றார்.
இதற்கிடையில் கேள்வியெழுப்பிய அர்ச்சுனா, வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்திருக்கின்றதா என வினவினார்.
அதற்கு அதிகாரி ஒருவர் ஆம் அனைத்துப் பணிகளும் இடம்பெறுகின்றன என பதிலளித்தார்.அதனையடுத்து அப்படியென்றால் நான் வீதி வீதியாக சென்று அவற்றைப் பரிசோதிக்கின்றேன் என்றார்.
அத்துடன் ஒன்றரை மாதங்கள் எனின் கிட்டத்தட்ட 22 வீதம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அதிகாரி அவ்வாறில்லை. நிதி முன்னேற்றம் என்பது பௌதிக முன்னேற்றத்தோடு சேர்ந்ததாகத் தான் காணப்படும்.
அதற்கமைய ஒரு கட்டுமாணத்தைக் கட்டுவதாக இருந்தால் ஆரம்பத்தில் எங்களுக்கு நிதிச் செலவுகள் இருக்காது. இதனைக் கொண்டு கட்டம் கட்டமாக நாங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தால் கட்டடம் அந்த நிலைக்கு வந்திருக்க வேண்டும். அதேபோல் பொருள் கொள்வனவாக இருந்தால் நாங்கள் அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் போது நிதிப் பிரமாணமானது இறுதியில் தான் கூடுதலாக இருக்கும். - என்றார்.
அதனையடுத்து கடந்த காலத்தில் சில செயற்பாட்டால் வடக்கு மாகாணத்துக்கு என்று கிடைக்கப்பெற்ற நிதிகள் திரும்பிச் சென்றிருக்கின்றன. கடந்த காலத்தில் சில திட்டங்கள் 30 வீதம் மட்டுமே செயற்படுத்தப்பட்டன. மீதியுள்ள 70 வீத திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு இனிவரும் காலங்களும் இல்லாமல் அனைத்துத் திட்டங்களும் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார் அர்ச்சுனா.
இறுதியாக மாவட்டச் செயலர் என்ற ரீதியில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க உத்தியோகத்தர் என்ற ரீதியில் சரியான முறையில் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்க அதிபர் என்ற ரீதியில் முழுமையாக நான் ஏற்றுக் கொள்கின்றேன்.எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் கடந்த காலம் நிதி திரும்பிச் செல்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன. இனிவரும் காலத்தில் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சரியான தீர்வை அளிக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'ஒவ்வொரு வீதியாக போய் பார்ப்பேன்' மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் அர்ச்சுனா எம்.பி முழக்கம். வடமாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதற்குரிய வேலைத்திட்டங்கள் சரியான முறையில் இடம்பெற்றதா, வீதிகள் ஒழுங்கான முறையில் திருத்தம் செய்யப்பட்டதா அவ்வாறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை “ஒவ்வொரு வீதியாக சென்று பரிசோதிப்பேன்” என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் தெரிவித்தார்.யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் காலை 09.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவ்வாறு கேள்விகளை அதிகாரிகளிடத்தே எழுப்பியுள்ளார்.கூட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாவட்டச் செயலாளர் தெரிவிக்கையில்,பாராளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தான் மத்திய அரசாங்கத்தால் மாகாண அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்ச் 21 ஆம் திகதிக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் நிதி ஒதுக்கீட்டுக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றது.அதிலும் சில அபிவிருத்திக்கு நிதி வந்துள்ளது. சில அபிவிருத்திக்கு நிதி வரவில்லை. சாதாரண நிதிப் பிரமாண நடைமுறைகளுக்கு அமைவாக ஒரு நிதி கூறுவிலைகளைப் போடுமாக இருந்தால் 14 நாட்கள் திட்டத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இருப்பினும் காலதாமதத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் தான் இந்த நிதி எமக்குக் கிடைத்தது. என்றார்.இதற்கிடையில் கேள்வியெழுப்பிய அர்ச்சுனா, வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்திருக்கின்றதா என வினவினார். அதற்கு அதிகாரி ஒருவர் ஆம் அனைத்துப் பணிகளும் இடம்பெறுகின்றன என பதிலளித்தார்.அதனையடுத்து அப்படியென்றால் நான் வீதி வீதியாக சென்று அவற்றைப் பரிசோதிக்கின்றேன் என்றார். அத்துடன் ஒன்றரை மாதங்கள் எனின் கிட்டத்தட்ட 22 வீதம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அதிகாரி அவ்வாறில்லை. நிதி முன்னேற்றம் என்பது பௌதிக முன்னேற்றத்தோடு சேர்ந்ததாகத் தான் காணப்படும்.அதற்கமைய ஒரு கட்டுமாணத்தைக் கட்டுவதாக இருந்தால் ஆரம்பத்தில் எங்களுக்கு நிதிச் செலவுகள் இருக்காது. இதனைக் கொண்டு கட்டம் கட்டமாக நாங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தால் கட்டடம் அந்த நிலைக்கு வந்திருக்க வேண்டும். அதேபோல் பொருள் கொள்வனவாக இருந்தால் நாங்கள் அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் போது நிதிப் பிரமாணமானது இறுதியில் தான் கூடுதலாக இருக்கும். - என்றார்.அதனையடுத்து கடந்த காலத்தில் சில செயற்பாட்டால் வடக்கு மாகாணத்துக்கு என்று கிடைக்கப்பெற்ற நிதிகள் திரும்பிச் சென்றிருக்கின்றன. கடந்த காலத்தில் சில திட்டங்கள் 30 வீதம் மட்டுமே செயற்படுத்தப்பட்டன. மீதியுள்ள 70 வீத திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு இனிவரும் காலங்களும் இல்லாமல் அனைத்துத் திட்டங்களும் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார் அர்ச்சுனா.இறுதியாக மாவட்டச் செயலர் என்ற ரீதியில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க உத்தியோகத்தர் என்ற ரீதியில் சரியான முறையில் நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்க அதிபர் என்ற ரீதியில் முழுமையாக நான் ஏற்றுக் கொள்கின்றேன்.எனத் தெரிவித்தார்.இதற்கிடையில் கடந்த காலம் நிதி திரும்பிச் செல்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன. இனிவரும் காலத்தில் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சரியான தீர்வை அளிக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.