• Sep 28 2024

ரணில் ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதிக்கு இறங்க நேரிடும்! தேரர் விடுத்த எச்சரிக்கை

Chithra / Jun 10th 2024, 12:18 pm
image

Advertisement

 

ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மீரிகம பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை முன்னிறுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

பாலித ரங்கே பண்டார தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார். 

ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு இந்த நாட்டில் ஆட்சியில் நீடிப்பாராயின் சில பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் முன்னெடுக்கும் நிலையும் ஏற்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்தமாட்டார் என தேரர் தெரிவித்துள்ளார்.

ரணில் ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதிக்கு இறங்க நேரிடும் தேரர் விடுத்த எச்சரிக்கை  ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.மீரிகம பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை முன்னிறுத்த முடியாத நிலையில் உள்ளனர்.பாலித ரங்கே பண்டார தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார். ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு இந்த நாட்டில் ஆட்சியில் நீடிப்பாராயின் சில பிரச்சினைகள் தோற்றம் பெறும்.மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் முன்னெடுக்கும் நிலையும் ஏற்படும்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்தமாட்டார் என தேரர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement