• Apr 19 2025

கடல் வழியாக இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கை: அறுவர் கைது..!

Sharmi / Apr 16th 2025, 11:45 am
image

உடப்புவ, கருகப்பனே கடற்பரப்பில் கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், நாட்டை சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, கடந்த 13 ஆம் திகதி அன்று வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர், உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

அங்கு குறித்த படகில் மூன்று பைகளில் அடைக்கப்பட்டிருந்த 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதேனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.










கடல் வழியாக இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கை: அறுவர் கைது. உடப்புவ, கருகப்பனே கடற்பரப்பில் கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், நாட்டை சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.அதன்படி, கடந்த 13 ஆம் திகதி அன்று வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர், உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு குறித்த படகில் மூன்று பைகளில் அடைக்கப்பட்டிருந்த 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதேனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement