தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனார் மயில்வானபுரம் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயில்வாகனபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதி மிக்க பன்னிரண்டு நாவல் மர குற்றிகள் கப் ரக வாகனம் மூலம் கடத்திச்செல்லப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக விசுவமடு பகுதியில் வீதி சோதனையின் மூலம் மரக்குற்றிகளை ஏற்றிப் பயணித்த கப்ரக வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மரக் கடத்தல் - நபரொருவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனார் மயில்வானபுரம் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயில்வாகனபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதி மிக்க பன்னிரண்டு நாவல் மர குற்றிகள் கப் ரக வாகனம் மூலம் கடத்திச்செல்லப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக விசுவமடு பகுதியில் வீதி சோதனையின் மூலம் மரக்குற்றிகளை ஏற்றிப் பயணித்த கப்ரக வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.