• Jul 03 2024

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! ஹிருணிகாவால் கடத்தப்பட்ட இளைஞர் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 1st 2024, 9:32 am
image

Advertisement


இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அமில பிரியங்கர என்ற இளைஞர் கடத்திச்செல்லப்பட்டு குடும்பத்தகராறைத் தீர்க்கும் முயற்சியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர இது தொடர்பில் கூறுகையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது.

அந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது. 

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும். 

இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக தண்டிக்கப்பட்டார். 

நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சட்டத்தை மதித்து சிறைச்சாலையில் காலத்தை கழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறப்பு வசதிகள் எதையும் அவர் கோரவில்லை என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட போது, ​​பெண் கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த ஹிருணிகா, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் அவர் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஹிருணிகா அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பெண் கைதிகளுடன் தனது நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு அவரிடமிருந்து எந்த இடையூறும் இல்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை ஹிருணிகா பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மருத்துவ அறிக்கை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஹிருணிகாவால் கடத்தப்பட்ட இளைஞர் வெளியிட்ட தகவல் இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அமில பிரியங்கர என்ற இளைஞர் கடத்திச்செல்லப்பட்டு குடும்பத்தகராறைத் தீர்க்கும் முயற்சியில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர இது தொடர்பில் கூறுகையில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்."நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது.அந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும். இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சட்டத்தை மதித்து சிறைச்சாலையில் காலத்தை கழிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிறப்பு வசதிகள் எதையும் அவர் கோரவில்லை என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட போது, ​​பெண் கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த ஹிருணிகா, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.பின்னர் அவர் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஹிருணிகா அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பெண் கைதிகளுடன் தனது நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு அவரிடமிருந்து எந்த இடையூறும் இல்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை ஹிருணிகா பெற்றுக்கொண்டுள்ளார்.இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மருத்துவ அறிக்கை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement