• Jun 09 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கால்நடை சேவைகள் பாதிப்பு

Chithra / Jun 9th 2025, 8:00 am
image

 கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரச கால்நடை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள்  இன்று காலை 6.00 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். . 

இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால்   வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கால்நடை சேவைகள் பாதிப்பு  கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரச கால்நடை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள்  இன்று காலை 6.00 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். . இதன்காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால்   வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement