யாழ் வலிகாமம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் CCTV கமெரா , 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன திருடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்டதை அவதானித்தனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.