• Aug 11 2025

துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால்: உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த தனிநபர்!

Thansita / Aug 11th 2025, 8:50 pm
image

துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்

துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்

பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்

2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்


காணிப்பிணக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்பட வேண்டும்

கிராம அலுவலர் திருமதி கிருஸ்ணரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணையும்  தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவரை பேச அழைத்த போது அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் திருவாளர் கிருஸ்ணரூபன் இன்றையதினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்பெறவில்லை ,இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் ,பிரதமர் செயலகம் ,ஆளுநர் அலுவலகம் ,மாவட்ட செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார் 

இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூற முடியாது

அவர் போராட்டம் நடத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன்

ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்

அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும் 

மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்


துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால்: உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த தனிநபர் துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்காணிப்பிணக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்பட வேண்டும்கிராம அலுவலர் திருமதி கிருஸ்ணரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணையும்  தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவரை பேச அழைத்த போது அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் திருவாளர் கிருஸ்ணரூபன் இன்றையதினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்பெறவில்லை ,இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் ,பிரதமர் செயலகம் ,ஆளுநர் அலுவலகம் ,மாவட்ட செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார் இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனஅவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூற முடியாதுஅவர் போராட்டம் நடத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன்ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும் மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement