முல்லைத்தீவு - களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால் மழைக்கு மத்தியில் சிரமதான பணிகள் நேற்றையதினம் மாலை ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர், உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும், முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.
களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழைக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி - ஆரம்பிக்கப்பட்ட சிரமதான பணி முல்லைத்தீவு - களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால் மழைக்கு மத்தியில் சிரமதான பணிகள் நேற்றையதினம் மாலை ஆரம்பிக்கப்பட்டது.முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டனஇவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர், உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும், முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.