• Jun 09 2025

காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்...!

shanuja / Jun 8th 2025, 5:27 pm
image

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சியசாலை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் அங்குரார்ப்பண நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை  (08) இடம்பெற்றது.  


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு  வருகைதந்து  சேவையை ஆரம்பித்து வைத்தனர். 


அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு புகையிரதத்தில் எரிபொருட்களை எடுத்து வருவதற்கான முயற்சிகளையும் விரைவில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நிகழ்வில் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பணம். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சியசாலை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் அங்குரார்ப்பண நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை  (08) இடம்பெற்றது.  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு  வருகைதந்து  சேவையை ஆரம்பித்து வைத்தனர். அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு புகையிரதத்தில் எரிபொருட்களை எடுத்து வருவதற்கான முயற்சிகளையும் விரைவில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிகழ்வில் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement