• Sep 29 2024

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை; நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா..? வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Jun 2nd 2024, 11:31 am
image

Advertisement

  

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து, மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்  தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 

எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை; நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா. வெளியான விசேட அறிவிப்பு   நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து, மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்  தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement