• Oct 13 2024

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு தொடரும் சீரற்ற காலநிலை -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Tamil nila / Oct 13th 2024, 7:37 pm
image

Advertisement

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை  எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 

மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும்” என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு தொடரும் சீரற்ற காலநிலை -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை  எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும்” என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement