• Mar 07 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

Ziya / Jan 2nd 2026, 4:42 pm
image

இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து குஷ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் 3 கிலோ 419 கிராம் 'குஷ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்பதோடு, அவர் நாட்டுக்குள் கடத்தி வந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 34.19 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியர் கைது இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து குஷ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் 3 கிலோ 419 கிராம் 'குஷ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்பதோடு, அவர் நாட்டுக்குள் கடத்தி வந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 34.19 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement