• Aug 12 2026

கந்தளாய் குளத்தில் அதிரடிச் சோதனை: தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு

Chithra / Aug 11th 2026, 10:49 am
image


கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

நேற்று மாலை கந்தளாய் குளப்பகுதியில் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகளைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4,000 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட வலைகள் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் குளத்தில் அதிரடிச் சோதனை: தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்று மாலை கந்தளாய் குளப்பகுதியில் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகளைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4,000 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட வலைகள் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement