• Sep 17 2024

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு...!

Sharmi / Feb 15th 2024, 10:33 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று(15) காலை  அபிவிருத்திக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகளிற்கான திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று(15) காலை  அபிவிருத்திக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகளிற்கான திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக இடம்பெற்றது.குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement