• Sep 08 2024

நித்திரை கலக்கத்தால் விபரீதம்? முள்ளிப்பொத்தானையில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி விபத்து - பலர் காயம்

Chithra / Jul 10th 2024, 8:07 am
image

Advertisement


திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10)அதிகாலை இடம்பெற்றுள்ளது.   

குறித்த பஸ் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது.

சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் பலரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார்  விரைந்துள்ளனர். 

நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

 மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


நித்திரை கலக்கத்தால் விபரீதம் முள்ளிப்பொத்தானையில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி விபத்து - பலர் காயம் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று (10)அதிகாலை இடம்பெற்றுள்ளது.   குறித்த பஸ் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது.சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் பலரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார்  விரைந்துள்ளனர். நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement